சனி, அக்டோபர் 08, 2011

அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைக்க நினைத்தால் ?


يُرِيدُونَ أَن يُطْفِؤُواْ نُورَ اللّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللّهُ إِلاَّ أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். 9:32.
 


(டென்மார்க் பத்திரிகை ஒன்றில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச் சித்திரம் வரைந்து பத்திரிகையில் வெளியிட்ட போது எழுதிய கட்டுரை)




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அறியாமை எனும் காரிருளில் சிக்கித் தவித்து கரை சேர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மனித சமுதாயத்திற்;கு அல்குர்ஆன் எனும் அணையாத ஒளியை ஏந்தி வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களை தீவிரவாதி போல் சித்தரித்து சித்திரம் வரைந்து மதவெறி தாகத்தை தனித்துக் கொண்டது டென்மார்க் பத்திரிக்கை நிருவனம் ஒன்று.

கிறுத்தவ டேனிஷ்களின் வரலாற்றைப் புரட்டினால் அர்களுக்கேத் தெரியும் யார் தீவிரவாதிகள் என்று.

இஸ்லாம் வந்த வேகத்தில் கிறுத்தவர் மதகுருமார்களின் புரோகிதத்தை ஒழித்துக்கட்டி  மக்களை அவர்களின் கோரப் பிடியிலிருந்து விடுவித்தது.

அவர்களின் கோரப் படியிலிருந்து விடுபட்ட மக்கள் புரோகிதம் இல்லாத இஸ்லாத்தை நோக்கி அணிவகுத்தனர். 

இதைக் கண்டு வெகுண்டெழுந்த கிறுத்தவ புரோகிதக் கூட்டம் முஸ்லிம்களை ழித்துக்கட்டி உலகம் முழுவதையும்> கிறித்தவத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சிலுவைப் போரைத் தொடங்கினார்கள்.

கண்மூடித் தனமானத் தாக்குதலை தொடுத்து சிறுபான்மை முஸ்லீம்களை அழித்தனர் ஆனால் இஸ்லாத்தை ஒழிக்க முடியவில்லை.

இயேசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பின் உலகை சொர்க்கபுரியாக்கி அதில் சுகமனுபவிப்பதற்காக (பவுல் என்பவர் இயேசு காலத்தில் வாழாதவர்) வேதத்தை மனம் போனப் போக்கில் எழுதினார்.  

ஆதமின் சந்ததிகள் அனைவருடைய பாவங்களையும் சிலுவையின் மூலம் இயேசு சுமந்து கொண்டார் எனும் கரடியை அதில் அவிழ்த்து விட்டு ஒட்டு மொத்த கிறித்தவ சமுதாயத்தையும் பாவத்தில் மூழ்கடித்து பாவிகளாக்கினார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்;வேறு வடிவில் இஸ்லாத்தை சீண்டுவதே அவர்களின் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

பல நேரங்களில் முஸ்லீம் பெயர் தாங்கிகளைக் கொண்டு சீண்டுவார்கள்> அதிலும் அவர்களுடைய திட்டம் நிறைவேறாமல் போனால் அதற்கடுத்து தாங்களே இஸ்லாத்திற்கு நன்மை செய்கிறோம் பேர்வழிகள் போல் களமிறங்குவார்கள் (முஹம்மது ஸல் அவர்களுக்கு சிலை வைக்க முற்பட்டது போன்றவைகள் உள்ளடங்கும்.).

சிலை வணக்கத்திற்கு உலகிலேயே முதன் முதலாக சாவு மணி அடித்தது இஸ்லாம் மட்டுமே என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  

நன்றாகத் தெரிந்திருந்தும் முஸ்லிம்களை சீண்டும் விதமாகவும் அல்லது ஒரு வேளை அது சில முஸ்லிம் பெயர் தாங்கி நாடுகளால்;; வரவேற்கப் பட்டுவிட்டால் அதன் மூலம் சிலை வணக்கத்தைப் புகுத்தி இஸ்லாத்தின் தனித் தன்மையை ( ஏகத்துவத்தை) சிதைத்து விட முடியும்.

இஸ்லாத்தின் ஏகத்துவம் சிதைந்து விட்டால் பிற மதங்களுடன் அது நிகராக தோன்றும் பொழுது மக்கள் அதன் பால் ஈர்க்கப்படுவதை விட்டும் தடுத்து விடலாம் என்றெண்ணி மிகப்பெரும் சதித் திட்டத்தை நிறைவேற்றம் முயற்சியில் இறங்கினார்கள். 

அதற்கு உலகம் முழுவதுமுள்ள முஸ்லீம்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதும் கை விட்டவர்கள் டென்மார்க் பத்திரிக்கை நிருவனத்தின் மூலம் சத்தியத்தூதர்(ஸல்) அவர்களை தீவிரவாதியாகவும், பெண் பித்தராகவும் சித்தரிக்கப்பட்டு சித்திரம் வரைய திட்டம் தீட்டி செயல் படுத்தினார்கள்.

கிறித்தவ முறையற்ற பாலியல் கலாச்சாரத்திற்கும், இஸ்லாமிய பாலியல் கலாச்சாரத்திற்கும் வித்தியாசமில்லை இரண்டும் ஒன்று தான் அதை அதன் தலைவரே பின்பற்றி உள்ளார் என்பதாக காட்டி அதை ஓரளவு மக்களை நம்ப வைத்து விட்டால் கிறுத்தவத்தை விட்டு வெளியேறும் மக்களைத் தடுத்து விடலாம் ன்றெண்ணி கேலிச்சித்திரம் வரைய டேனீஷியர்களை ஏவினர் சில டேனீஷியர்கள் சில சித்திரங்களை மனம் போன போக்கில் கிறுக்கினர்.

பிரசித்திப் பெற்ற ஒருவரைப் பற்றி கேலிச் சித்திரம் வரைவதாக இருந்தால் அவரைப் பற்றிய வரலாற்றை ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அண்ணல் அவர்களை கேலிச்சித்திரம் வரைந்த டேனீஷ்கள் எவருக்கும் அண்ணல் அவர்களைப் பற்றிய வரலாறு அறவேத் தெரியாது.
 
உலக முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் அதை பத்திரிக்கை சுதந்திரம் என்றுக் கூறி நழுவி விட்டனர். 

அவர்களின் கடவுளர்கள் மூவரையும் மனம் போனப் போக்கில் கேலிச்சித்தரம் வரைய முஸ்லீம்களுக்கு நேரம் அதிகமாகாது மூவரில் ஒருவர் பெண் என்பதால் இலகுவாக வரையலாம் ஆனாலும் உலக பெண்களில் முதன்மையானவர்  என்று அவரை இறைவன் சிறப்பித்துக் கூறுவதால் வரலாற்றைத் தெரிந்த முஸ்லீம்கள் இந்த ஈனச் செயலை செய்ய முன் வரவில்லை. கண்டனப் போராட்டங்கள மட்டும் முஸ்லீம்கள் நடத்தினர்.

இன்று உலகில் வல்லரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் தங்களது வல்லமையை இஸ்லாமிய நாட்டுப் பொருள் வளத்திலிருந்தே வளர்த்துக் கொண்டார்கள். இஸ்லாமிய அரபு நாடுகளில் வனிகம் என்கிற பெயரில் பெருக்கிக் (சுருட்டிக்) கொண்டார்கள்.
  
இவ்வாறு நம்மிடமிருந்து சுரண்டிக் கொண்டு நம்மையே மடையர்களாக நினைப்பார்களேயானால் நாமும் நம்மாலான சக்திக்கு தகுந்தவாறு எதையாவது செய்தேயாக வேண்டும். அதுவும் மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். 

உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் தடுக்கட்டும்> அதற்கு இயலாவிட்டால் தமது நாவால் தடுக்கட்டும்> அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் தடுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம.
 
மேற்கானும் நபிமொழி தீமையைக் கானும் பொழுது மூன்று நிலைகளில் எதிர்க்குமாறுக் கூறுகிறது> ஒன்று கையால் தடுப்பது> கையால் தடுக்கும் அளவு இன்று நாம் சக்தி பெற்றிருக்க வில்லை> இரண்டாவது நிலை வாயால் தடுக்க வேண்டும் மேற்படியார்களின் அடக்குமுறைகளை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்ய முடியாத அளவு சில நாடுகளில் குரல்வலைகள் நெறிக்கப் பட்டுள்ளதால் அதுவும் முடியாத நிலையாகி விட்டது> மூன்றாவது நிலைபாடு என்ன மாதிரியான நிலையிலும் முஸ்லீமுக்கு சாத்தியமானதேயாகும்.

நம்மால் முடிந்தளவு அவர்கள் நாட்டுத்  தயாரிப்புகளை வாங்குவதிலிருந்;து தவிர்த்துக் கொள்ள வேண்டும் இதை இஸ்லாமிய னைத்து நாடுகளும் ஒருமித்த முடிவுக்கு வந்திருப்பதால் நாமும் அதை பின்பற்றுவோம் இது தான் மூன்றாவதாகக்கூறும் பலவீனமான நிலையாகும் இதையாவது செய்தால் அரபுநாட்டுப் பொருளாதாரத்தில் வயிறு வளர்க்கும் டேனீஷயர்களுக்கு மிகப்பெரும் பாடமாக அமையும். 



 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்